hero-img1

Arulmigu Abathsahayeswarar Temple, Ponnur

0 Comments

ஆபத்சகாயேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொன்னூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்து கோயிலாகும். இத்தலத்தின் பழமையான பெயர் திரு அன்னியூர் ஆகும். இங்கு இறைவன் ஆபத்சகாயேசுவரராகவும், இறைவி பெரியநாயகியம்மையாகவும் அருள்பாலிக்கின்றனர். காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 22ஆவது சிவத்தலமாகும். இது 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகவும், தமிழ்ச் சைவ நாயன்மார்களான திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரின் தேவாரப் பாடல்களில் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.  கோயிலின் வலப்புறத்தில் மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர் மற்றும் சம்பந்தர் எழிலோடு எழுந்திருக்கின்றனர். திருச்சுற்றில் புனுகீஸ்வரர், விநாயகர், முருகன் மற்றும் பெரியநாயகிக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. அம்மன் சன்னதிக்கு அடுத்ததாக நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. கோயிலின் முன்புறத்தில் அழகிய திருக்குளம் காணப்படுகிறது.

Get Your Free Sivapuranam Booklet


பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் என்ற அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டினர். சிவன் யாகத்தில் இருந்ததால், தியானத்தை களைக்க மன்மதனை உதவிக்கு அழைத்தனர். மன்மதன் சிவனின் தியானத்தை களைத்ததும், கோபமுற்ற சிவன், அவரை எரித்து சாம்பலாக்கினார். 
 
மன்மதனின் மரணத்தில் மனம் கலங்கிய ரதிதேவி, சிவனை வேண்டி தனது கணவனை மீட்டுத் தருமாறு கேட்டாள். சிவன், தகுந்த காலத்தில் மன்மதன் மீண்டும் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்று கூறினார். கணவன் விரைவில் உயிர்பெற வேண்டும் எனும் ஆசையில், ரதிதேவி இத்தலத்தில் தவமிருந்து சிவனை பக்தியுடன் வழிபட்டாள். அதன் பிறகு, மன்மதன் உயிர்பெற்று, ரதியுடன் இணைந்து இங்கு சிவனை வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன், இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

இலவச சிவபுராணம் கையேடு 


இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் எழுந்தருளியிருக்கிறார் என்பது ஐதீகம். எனவே, அவரை அக்னிபுரீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பூஜை செய்யும் பக்தர்கள், இங்கு சுவாமியை வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள், சூரிய ஒளி நேரடியாக சுவாமி மீது படிகிறது. கார்த்திகை மாதத்தில், ரதிதேவி சிவனை வழிபட்ட வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
 
அம்பாள் பெரியநாயகி தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். ஆடிப்பூரம் மற்றும் ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று, திருமணத்தடை நீங்க பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இதனால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

இங்கு இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன, அவரது காலடியில் நந்தியும் வீற்றிருக்கிறது. அவரை வழிபட்டால் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி பெரிதும் ஏற்படும் என்கிறார்கள்.
 
பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகே வீற்றிருக்கின்றனர். தந்தையான சூரியனின் அருகில் இருந்தாலும், இங்கு சனி பகவன் சுபசனீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் அவரை வழிபட்டால், அதன் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 7.00–10.00  5.30–7.00
திங்கட்கிழமை 7.00–10.00  5.30–7.00
செவ்வாய்க்கிழமை 7.00–10.00  5.30–7.00
புதன்கிழமை 7.00–10.00  5.30–7.00
வியாழக்கிழமை 7.00–10.00  5.30–7.00
வெள்ளிக்கிழமை 7.00–10.00  5.30–7.00
சனிக்கிழமை 7.00–10.00  5.30–7.00

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

பொன்னூர், தமிழ்நாடு - 609203.
 
Ponnur, Tamil Nadu - 609203.

 

 

இலவச சிவபுராணம் கையேடு

 


Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.

Written by Sivanmanai Mission

If you have any suggestions or questions, please contact us at 900-305-9000. Click this link to join Thiruvasagam WhatsApp Group https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqrc

Leave a Reply

    Growth Is Just One Click Away

    Don't feel like calling? Just share some details about your SOP Requirements & Fhyzics representative will get in touch with you. Schedule A Meeting with our Manager [Consulting & Certifications]