hero-img1

Thiruvasagam-Prarthanaipathu

திருச்சிற்றம்பலம்

கலந்து நின் அடியாரோடு அன்று 
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் 
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே 
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய் 
ஆர்வங் கூர அடியேற்கே. (8)

Thiruvasagam-Seththilaap Paththu

திருச்சிற்றம்பலம்

பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கு அறிஒண்ணாச்
செய்ய மேனியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (8)

Thiruvasagam-Tiruvunthiyar

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. (3)

அன்னதான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை

அன்னதானம் வழங்குபவர் நாட்காட்டி

{% module_block module "widget_6a777f4c-f64f-4308-997e-977292c61f23" %}{% module_attribute "child_css" is_json="true" %}{}{% end_module_attribute %}{% module_attribute "css" is_json="true" %}{}{% end_module_attribute %}{% module_attribute "definition_id" is_json="true" %}null{% end_module_attribute %}{% module_attribute "field_types" is_json="true" %}{"html":"html"}{% end_module_attribute %}{% module_attribute "html" is_json="true" %}{% raw %}"

Thiruvasagam-Thiruvempavai

திருச்சிற்றம்பலம்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசுஏலோர் எம்பாவாய். (8)

Thiruvasagam-Thiruvesaravu

திருச்சிற்றம்பலம்

இரும்புதரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என்என்பு உருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன்கழல் இணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகள் எல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே. (4)

சிவன்மனை திருமுறை அருட்குழு நிகழ்ச்சிகள்

1. 18-11-2025 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, அண்ணா நகர்
இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply