திருச்சிற்றம்பலம்
கலந்து நின் அடியாரோடு அன்று
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. (8)

திருச்சிற்றம்பலம்
கலந்து நின் அடியாரோடு அன்று
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. (8)
திருச்சிற்றம்பலம்
பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கு அறிஒண்ணாச்
செய்ய மேனியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (8)
திருச்சிற்றம்பலம்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. (3)
அன்னதானம் வழங்குபவர் நாட்காட்டி
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசுஏலோர் எம்பாவாய். (8)
திருச்சிற்றம்பலம்
இரும்புதரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என்என்பு உருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன்கழல் இணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகள் எல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே. (4)
1. 18-11-2025 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, அண்ணா நகர்
இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply