திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் அருளிய, பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகப் போற்றப்படும் அருட்பெருநூல். இறைவனின் திருவருளால் உள்ளம் உருகி, ஆன்மா சிவத்துடன் ஒன்றிடும் பேரனுபவத்தை எளிமையான, ஆழமான தமிழில் வெளிப்படுத்தும்

திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் அருளிய, பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகப் போற்றப்படும் அருட்பெருநூல். இறைவனின் திருவருளால் உள்ளம் உருகி, ஆன்மா சிவத்துடன் ஒன்றிடும் பேரனுபவத்தை எளிமையான, ஆழமான தமிழில் வெளிப்படுத்தும்
திருச்சிற்றம்பலம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டுஎன்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. (4)
திருச்சிற்றம்பலம்
மாறு இலாத மாக்கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாள்இணை
வேறு இலாப் பதப்பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாதநீ எளியை ஆகிவந்து
ஒளிசெய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சுஉடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. (8)
திருச்சிற்றம்பலம்
பூஏறு கோனும் புரந்தரனும் பொற்புஅமைந்த
நாஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாஏறு சோதியும் வானவருந் தாம்அறியாச்
சேஏறு சேவடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ. (4)
திருச்சிற்றம்பலம்
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும்
வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடு
கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என்நான்
செய்கேன் பேசாயே. (8)
திருச்சிற்றம்பலம்
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை
ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்றுஇது என்றபோது நின்னொடு
என்னொடு என்னிதாம்
புணர்ப்பது ஆக அன்று இதுஆக
அன்பு நின்கழல்கணே
புணர்ப்பது ஆக அங்கணாள
புங்கம் ஆன போகமே. (8)
திருச்சிற்றம்பலம்
மாதுஇவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணை அடியார்
குலாவும் நீதிகுணம் ஆகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறைஎம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருள்அறிவார் எம்பிரான் ஆவாரே. (8)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply