hero-img1

Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

Thiruvasagam-Achchappaththu

திருச்சிற்றம்பலம் 

புற்றில்வாள் அரவும் அஞ்சேன்  
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்  
கற்றைவார் சடைஎம் அண்ணல்  
கண்ணுதல் பாதம் நண்ணி  
மற்றும்ஓர் தெய்வம் தன்னை  
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு  
கற்றிலாதவரைக் கண்டால்  
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)

Thiruvasagam-Kaaruniyathu Irangal

திருச்சிற்றம்பலம் 

தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் 
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. (8)

Thiruvasagam-Achcho Pathigam

திருச்சிற்றம்பலம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (4)

Thiruvasagam-Prarthanaipathu

திருச்சிற்றம்பலம்

கலந்து நின் அடியாரோடு அன்று 
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் 
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே 
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய் 
ஆர்வங் கூர அடியேற்கே. (8)

Thiruvasagam-Seththilaap Paththu

திருச்சிற்றம்பலம்

பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கு அறிஒண்ணாச்
செய்ய மேனியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (8)

Thiruvasagam-Tiruvunthiyar

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. (3)

அன்னதான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை

சிவன்மனை அன்னதான தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Volunteers)

அன்பான தன்னார்வலர்களுக்கு வணக்கம். சிவன்மனையின் காலை நேர நித்ய அன்னதான சேவையில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உணவைப் பக்தர்களுக்குச் சீராகவும்,

Leave a Reply