திருச்சிற்றம்பலம்
செழுக்கமலத் திரள்அனநின்
சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத்து அடியருடன்
போயினர் யான் பாவியேன்
புழுக்கன்உடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி ஞானம்இலா
அழுக்குமனத்து அடியேன்
உடையாய் உன் அடைக்கலமே. (8)

திருச்சிற்றம்பலம்
செழுக்கமலத் திரள்அனநின்
சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத்து அடியருடன்
போயினர் யான் பாவியேன்
புழுக்கன்உடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி ஞானம்இலா
அழுக்குமனத்து அடியேன்
உடையாய் உன் அடைக்கலமே. (8)
திருச்சிற்றம்பலம்
உடையாள் உன்தன் நடுவுஇருக்கும்
உடையாள் நடுவுள் நீஇருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
புரியாய் பொன்னம்பலத்துஎம்
முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்னின்றே. (8)
திருச்சிற்றம்பலம்
ஏர்ஆர் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீர்ஆர் திருநாமம் தேர்ந்து உரையாய்-ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. (4)
மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகத்தின் மேன்மையையும், அதில் புதைந்துள்ள ஆன்மீகத் தத்துவங்களையும் இளைய தலைமுறையினரும் அனைத்துத் தரப்பு
திருச்சிற்றம்பலம்
முத்து நல்தாமம் பூமாலை தூக்கி
முளைக்குடம் தூபம் நல்தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடு பல்லாண்டு இசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொள்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே. (8)
திருச்சிற்றம்பலம்
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. (8)
திருச்சிற்றம்பலம்
இருகை யானையை ஒத்திருந்து என்உளக்
கருவை யான்கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே. (4)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply