hero-img1

Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

39-Thiruvasagam-Thiruppulambal

திருச்சிற்றம்பலம்

பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறாவெண்ணீறுஆடி
ஓங்குஎயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் புகழேனே. (4)

27-Thiruvasagam-Punarchippaththu

திருச்சிற்றம்பலம் 

சுடர் பொற்குன்றைத் தோளா முத்தை 
வாளா தொழும்பு உகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட 
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட்டு இன்னுஞ் சாரமாட்டாத் 
தன்னைத் தந்த என் ஆரமுதைப் 
புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ என் 
பொல்லா மணியைப் புணர்ந்தே. (8)

22-Thiruvasagam-Koyil Thiruppathigam

 திருச்சிற்றம்பலம் 

மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழிஅடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழு பரஞ்சோதி
உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. (8)

14-Thiruvasagam-Tiruvunthiyar

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. (3)

04-Thiruvasagam-Pottri Thiruagaval

திருச்சிற்றம்பலம்

நான்முகன் முதலா வானவர் தொழுதுஎழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில் (5)

20-Thiruvasagam-Thiruppalliyezhuchi

திருச்சிற்றம்பலம்

போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே  

புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு  
ஏற்றிநின் திருமுகத்து எமக்குஅருள் மலரும்  
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்  
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்  
திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே  
ஏற்றுயர் கொடிஉடையாய் எமை உடையாய்  
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (8)

18-Thiruvasagam-Kuyirpattu

திருச்சிற்றம்பலம் 

கீதம் இனிய குயிலே கேட்டியேல் 
எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் 
ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்இறந்து
நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம் 
இலான்வரக் கூவாய். (8)

Leave a Reply