திருச்சிற்றம்பலம்
பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறாவெண்ணீறுஆடி
ஓங்குஎயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் புகழேனே. (4)

திருச்சிற்றம்பலம்
பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறாவெண்ணீறுஆடி
ஓங்குஎயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் புகழேனே. (4)
திருச்சிற்றம்பலம்
சுடர் பொற்குன்றைத் தோளா முத்தை
வாளா தொழும்பு உகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட்டு இன்னுஞ் சாரமாட்டாத்
தன்னைத் தந்த என் ஆரமுதைப்
புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. (8)
திருச்சிற்றம்பலம்
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழிஅடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழு பரஞ்சோதி
உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. (8)
திருச்சிற்றம்பலம்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. (3)
திருச்சிற்றம்பலம்
நான்முகன் முதலா வானவர் தொழுதுஎழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில் (5)
திருச்சிற்றம்பலம்
போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்குஅருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடிஉடையாய் எமை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (8)
திருச்சிற்றம்பலம்
கீதம் இனிய குயிலே கேட்டியேல்
எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம்
ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்இறந்து
நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம்
இலான்வரக் கூவாய். (8)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply