திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வம் தன்னை
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு
கற்றிலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)

திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வம் தன்னை
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு
கற்றிலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)
திருச்சிற்றம்பலம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (4)
திருச்சிற்றம்பலம்
கலந்து நின் அடியாரோடு அன்று
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. (8)
திருச்சிற்றம்பலம்
பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கு அறிஒண்ணாச்
செய்ய மேனியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (8)
திருச்சிற்றம்பலம்
இரும்புதரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என்என்பு உருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன்கழல் இணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகள் எல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே. (4)
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசுஏலோர் எம்பாவாய். (8)
திருச்சிற்றம்பலம்
உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்புஎனப் பழுத்தஎன் குடிமுழுது ஆண்டு
வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீர்உடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே. (8)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply