hero-img1

Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

35-Thiruvasagam-Achchappaththu

திருச்சிற்றம்பலம் 

புற்றில்வாள் அரவும் அஞ்சேன்  
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்  
கற்றைவார் சடைஎம் அண்ணல்  
கண்ணுதல் பாதம் நண்ணி  
மற்றும்ஓர் தெய்வம் தன்னை  
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு  
கற்றிலாதவரைக் கண்டால்  
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)

51-Thiruvasagam-Achcho Pathigam

திருச்சிற்றம்பலம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (4)

32-Thiruvasagam-Prarthanaipathu

திருச்சிற்றம்பலம்

கலந்து நின் அடியாரோடு அன்று 
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் 
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே 
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய் 
ஆர்வங் கூர அடியேற்கே. (8)

23-Thiruvasagam-Seththilaap Paththu

திருச்சிற்றம்பலம்

பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கு அறிஒண்ணாச்
செய்ய மேனியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (8)

38-Thiruvasagam-Thiruvesaravu

திருச்சிற்றம்பலம்

இரும்புதரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என்என்பு உருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன்கழல் இணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகள் எல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே. (4)

07-Thiruvasagam-Thiruvempavai

திருச்சிற்றம்பலம்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசுஏலோர் எம்பாவாய். (8)

37-Thiruvasagam-Pidithapathu

திருச்சிற்றம்பலம்

உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த 
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்புஎனப் பழுத்தஎன் குடிமுழுது ஆண்டு 
வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே 
செம்பொருள் துணிவே சீர்உடைக் கழலே 
செல்வமே சிவபெருமானே 
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
எங்கு எழுந்தருளுவது இனியே. (8)

Leave a Reply