hero-img1

Arulmigu Manickavannar Temple, Thiruvalaputhur

0 Comments

மாணிக்கவண்ணர் திருக்கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாளப்புத்தூரில் அமைந்துள்ள ஒரு பிரசித்திபெற்ற சிவாலயமாகும். இங்கு மூலமூர்த்தியாக சிவபெருமான் மாணிக்கவண்ணர் மற்றும் ரத்னபுரீஸ்வரர் என போற்றப்படுகிறார். அவரது தேவியர் பிரம்ம குந்தலாம்பிகை மற்றும் வந்தார் பூங்குழலி என்ற திருநாமங்களால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும். இந்த திருக்கோவில் தமிழ்சைவர நாயன்மார்களான திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல்களில் போற்றப்பட்ட 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் முருகப்பெருமான், கஜலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் சன்னதிகள் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் நந்தியுடன் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

Get Your Free Sivapuranam Booklet


அர்ஜுனன் இத்தலத்திற்குள் சென்றபோது தாகம் அதிகமாகியது, எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. மனம் களைத்த அர்ஜுனன் ஓரிடத்தில் அமர்ந்து விட, அப்போது அங்கு ஒரு முதியவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் தாகம் தணிக்க நீர் தருமாறு கேட்டான். அதற்கு முதியவர், அருகிலிருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, அங்கு தோண்டினால் நீர் கிடைக்கும் என்றார். அர்ஜுனன், தன் வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்தில் நீர் தேடச் சென்றான். 
 
ஆனால், அந்த முதியவர் அருகிலிருந்த புற்றில் அர்ஜுனனின் வாளை மறைத்து வைத்துவிட்டு மறைந்துவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது, முதியவர் காணாமல் போனதை கவனித்தான். அவரைக் தேடிக் கொண்டிருக்கும் போது, பாததடங்களை கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தன. அந்த புற்றினுள் தனது வாள் இருப்பதை கண்ட அர்ஜுனன், அதைப் எடுத்தவுடன், அங்கே ஒரு சுயம்புலிங்கம் வெளிப்பட்டதை பார்த்தான்.  

இலவச சிவபுராணம் கையேடு 


இதனைத் தொடர்ந்து, சிவன் அர்ஜுனனுக்கு காட்சி தந்து, முதியவராக வந்தது தானே என்பதைக் கூறினார். இதனால் மகிழ்ந்த அர்ஜுனன், இவ்விடத்தில் ஒரு கோயில் எழுப்பி, சிவனை பக்தியுடன் வழிபட்டான். அர்ஜுனனின் வாளை மறைத்து வைத்ததால், இத்தலம் "வாளொளிப்புற்றூர்" என்று அழைக்கப்பட்டது. 
 
தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி பாம்பு தளர்ச்சி அடைந்து, தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்தது. இதனை உணர்ந்த சிவன், விஷத்தை ஏற்று உண்டு உலகத்தை காத்தார். பின்னர், தேவர்கள் அமிர்தத்தை பெற்றனர். தன் செயலுக்காக மனம் வருந்திய இத்தலத்தில் மாணிக்கக் கல்லை உமிழ்ந்து, சிவனை வேண்டி பூஜை செய்து. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். பிற்காலத்தில், இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனமாக இருந்தது. 
 
ஒருமுறை, ருதுகேதன் என்ற மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது மக்கள் பசியால் துன்புறுந்தனர். இதனால், மக்களை காப்பாற்ற சிவன் மாணிக்க மழையை பொழிவித்தார். இதனால், அவர் "மாணிக்கவண்ணர்" என புகழப்பட்டார். மேலும், மாணிக்கக் கல்லால் பூஜை செய்யப்பட்டதால் இந்த திருநாமம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மகிஷாசுரனை வீழ்த்திய துர்க்கை தேவியார், எட்டுக் கைகளுடன் தோன்றி, கீழ் இடது கையில் கிளியுடன் காட்சியளிக்கிறார். மற்ற கைகளில் ஆயுதங்களை ஏந்தி, கருணை நிறைந்த தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் சிவலிங்கோத்பவர் முன், அறியாமையின் அடையாளமாக முயலகனும், ஒரு நாகமும் காணப்படுகின்றனர்.
 
பதவி உயர்வும் பணி இடமாற்றமும் பெற சிவனை வழிபடுகின்றனர். திருமணத் தடைகள் நீங்க துர்க்கையைத் தரிசிக்கின்றனர். ஜாதக ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், ராகு-கேது தோஷம் உள்ளோர் இத்தல விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். 


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 6.00–12.00  4.00–7.00
திங்கட்கிழமை 6.00–12.00  4.00–7.00
செவ்வாய்க்கிழமை 6.00–12.00  4.00–7.00
புதன்கிழமை 6.00–12.00  4.00–7.00
வியாழக்கிழமை 6.00–12.00  4.00–7.00
வெள்ளிக்கிழமை 6.00–12.00  4.00–7.00
சனிக்கிழமை 6.00–12.00  4.00–7.00

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

சிவன் கோவில் தெரு, திருவாளப்புத்தூர், மயிலாடுதுறை, தமிழ்நாடு - 609205.
 
Sivan Kovil Street, Thiruvalaputhur, Mayiladuthurai, Tamil Nadu - 609205.

 

 

இலவச சிவபுராணம் கையேடு

 


Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.

Written by Sivanmanai Mission

If you have any suggestions or questions, please contact us at 900-305-9000. Click this link to join Thiruvasagam WhatsApp Group https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqrc

Leave a Reply

    Growth Is Just One Click Away

    Don't feel like calling? Just share some details about your SOP Requirements & Fhyzics representative will get in touch with you. Schedule A Meeting with our Manager [Consulting & Certifications]