hero-img1

Arulmigu Ekambaranathar Temple, Kanchipuram

0 Comments

ஏகாம்பரநாதர் என்று அழைக்கப்படும் இந்த திருக்கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது பல்லவர் காலத்திலேயே சிறப்புடன் விளங்கியதாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் நகரில் உயர்ந்த கோபுரம் கொண்ட திருக்கோயில் ஏகாம்பரநாதர் ஆலயமாகும். இத்திருக்கோயில் தெற்கு ராஜ கோபுரம், பல்லவ கோபுரம், மற்றும் மேற்கு கோபுரம் என மூன்று ராஜ கோபுரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கியாக அமைந்துள்ள ஏகாம்பரநாதர் சன்னதியில் மணல் லிங்கம் எழிலுடன் விளங்குகிறது. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இடபேசுவரர், நடராஜர், லிங்பேஸ்வரர், காலபைரவர் உள்ளிட்ட மொத்தம் பதினெட்டு சன்னதிகள் இந்தக் கோயிலில் அமைந்துள்ளன.  

Get Your Free Sivapuranam Booklet


சிவபெருமான் கயிலையில் வீற்றிருந்தபோது, பார்வதி விளையாட்டாக அவரது கண்களை மூடினார். இதனால் உலகமெல்லாம் இருளில் மூழ்கியது. உடனே சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்து இருளை நீக்கினார். தவறை உணர்ந்த பார்வதி, மன்னிப்புக்கோரினாள். அதன்பிறகு, பார்வதி கயிலாயத்தை விட்டுத் திரும்பி, காஞ்சியில் கம்பை ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தாள்.  
 
சிவன், பார்வதியை சோதிக்க, கங்கையின் நீரை வெள்ளமாக பெருக்கினார். வெள்ளத்தில் சிவலிங்கம் அடித்துச் செல்லாமல் காப்பாற்ற, பார்வதி அதை தனது கைகளால் இறுகப்பிடித்தாள். அதன் பின்னர், சிவபெருமான் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போன்ற தோற்றத்துடன் எழுந்தருளி, அம்மைக்கு அருள் பாலித்தார்.

இலவச சிவபுராணம் கையேடு 

சங்கரமடத்திற்கு அருகிலுள்ள இந்த திருக்கோயில், ஏகம் ஆம்பரம் (ஒற்றை மாமரம்) தல விருட்சமாகக் கொண்டுள்ளது. அத்தலவிருட்சத்தினடியில் ஏகாம்பரநாதரை ஏலவார் குழலி அம்மை கைப்பிடித்ததால், இது மாவடி என அழைக்கப்படுகிறது. இதைத் திருநாளாகக் கருதி, இங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன. 
 
இங்கு விஜயநகர காலத்திய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது, இது முன்பு நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டி பின்னர் திருத்தியதாகவும் அறியப்படுகிறது.  
 
"தென்னாடுடைய சிவனே போற்றி" எனப் பொதுவாக சிவத்தலங்களில் போற்றப்படுவதோடு, இத்தலத்தில் "ஏகாம்பரநாதரை எந்தாய் போற்றி" என சிறப்பாக போற்றப்படுகிறது. 

சிவன் மாமரத்தின் அடியில் தோன்றி அருள் பாலித்ததும், திருமால் தனது தங்கை காமாட்சியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருக்கல்யாண உற்சவத்தின் போது, இத்திருக்கோயிலில் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக உள்ளது. குழந்தை பேறு வேண்டியவர்கள், கோயிலின் மாமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.    
 
இக்கோயிலில் சித்திரையில் திரு ஊஞ்சல் உற்சவம், வைகாசியில் விசாகம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பவித்ரோத்சவம், ஆவணியில் நடராஜர் அபிஷேகம் மற்றும் மூலம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் தீபாவளி, கந்தசஷ்டி, கார்த்திகையில் சோமவார லட்சதீபம், தையில் ரத சப்தமி, தெப்பத் திருவிழா, தைப்பூசம், மாசியில் மகா சிவராத்திரி, தவன உற்சவம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திர பிரம்மோற்சவம் இக்கோயிலில் மிகவும் முக்கியமான விழா ஆகும்.   
 

கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 6.00–12.30  4.00–8.30
திங்கட்கிழமை 6.00–12.30  4.00–8.30
செவ்வாய்க்கிழமை 6.00–12.30  4.00–8.30
புதன்கிழமை 6.00–12.30  4.00–8.30
வியாழக்கிழமை 6.00–12.30  4.00–8.30
வெள்ளிக்கிழமை 6.00–12.30 4.00–8.30
சனிக்கிழமை 6.00–12.30  4.00–8.30

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, காஞ்சிபுரம், தமிழ்நாடு - 631502. 
 
Ekambaranathar Sannidhi Street, Kanchipuram, Tamil Nadu 631502. 

Temple Website

 

 

இலவச சிவபுராணம் கையேடு

 


Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.

Written by Sivanmanai Mission

If you have any suggestions or questions, please contact us at 900-305-9000. Click this link to join Thiruvasagam WhatsApp Group https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqrc

Leave a Reply

    Growth Is Just One Click Away

    Don't feel like calling? Just share some details about your SOP Requirements & Fhyzics representative will get in touch with you. Schedule A Meeting with our Manager [Consulting & Certifications]