திருவாசகம் ஞானவினா போட்டி
மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகத்தின் மேன்மையையும், அதில் புதைந்துள்ள ஆன்மீகத் தத்துவங்களையும் இளைய தலைமுறையினரும் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்துகொள்ளச் செய்வதே இப்போட்டியின் முதன்மை நோக்கமாகும். "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழிக்கு ஏற்ப, மக்களின் மனதில் பக்தியையும், தமிழ் இலக்கியப் பற்றையும், இறை சிந்தனையையும் நற்பண்புகளாக விதைக்க சிவன்மனை அமைப்பால் இப்போட்டி நடத்தப்படுகிறது.
சிவன்மனை – ஓர் அறிமுகம்
சிவன்மனை என்பது சைவ நெறியையும், சிவ வழிபாட்டையும், தமிழ் ஆன்மீகப் பண்பாடுகளையும் மக்களிடையே பரப்பும் ஒரு முதன்மையான அமைப்பாகும். பன்னிரு திருமுறைகள் மற்றும் சைவ சித்தாந்தப் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
நித்திய அன்னதானம்: அடியார்களுக்கு உணவு அளிக்கும் ஆன்மீகப் பணி.
கைலாய வாத்தியம்: சிவ வழிபாட்டிற்குரிய பாரம்பரிய இசை மரபைப் பேணி வளர்த்தல்.
திருமுறை நிகழ்ச்சிகள் & உழவாரப் பணி: கோயில் திருப்பணிகள் மற்றும் திருமுறைப் நிகழ்ச்சிகள், சிவபுராணம் விளக்க உரை.
பதிப்பித்தல் & ஆன்மீகப் போட்டிகள்: ஆன்மீக நூல்கள் வெளியீடு மற்றும் 'ஞானவினா' போன்ற போட்டிகள் மூலம் இளைய தலைமுறைக்கு சைவ நெறியை கற்பித்தல்.