hero-img1

Arulmigu Padaleeswarar Temple, Cuddalore

0 Comments

தமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டத்தில் அமைந்த திருப்பாதிரிப்புலியூர் நடுநாட்டு தலம், அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு திருத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ பாடலீஸ்வரர் என வழங்கப்படுகிறார். இவ்வாலயம் பல்லவர்கள் மற்றும் நடுப்பழிய காலச் சோழர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவகர தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம், தென் பெண்ணை தீர்த்தம், கடல் தீர்த்தம் ஆகிய நீர்தீர்த்தங்களை கொண்டுள்ளது. முன்பு பாதிரிவனமாக இருந்த இந்தத் தலம், நடுநாட்டு தலங்களில் 18-வது தலமாக சிறப்பிக்கப்படுகிறது. ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது மற்றும் 5 நிலைகள், 7 கலசங்கள் கொண்டதாக உள்ளது. அம்மன் சன்னதி பெரியநாயகி அம்மன் என வழங்கப்பட்டு, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி சன்னதியின் வலப்புறத்தில் கணபதி, பரிவார சன்னதிகள், சூரியன், சந்திரன், அப்பர், பள்ளியறை, 63 நாயன்மார்கள், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர் உற்சவ மூர்த்திகள், முருகர் சன்னதி, கெஜலட்சுமி, ஸ்தல விருட்சம் (பாதிரி மரம்), அம்மன் தபஸ் இருந்த பீடம், துர்க்கை, நடராஜர், நவக்கிரகம் சன்னதிகள் அமைந்துள்ளன. இது ஆன்மிகத் திருத்தலமாக மட்டுமல்லாமல், வரலாற்றுப் பெருமை மிக்க திருத்தலமாகவும் திகழ்கிறது.

Get Your Free Sivapuranam Booklet


உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு, இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தி, இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும், தோல்வி இறைவனுக்கே. ஆனால், வெற்றி தனக்கே என நினைத்த இறைவியின் இருக்கண்களை, பிராட்டி தன் இருக்கரங்களால் புதைத்தாள். இதனால், உலகம் இருண்டு, அனைத்து செயல்களும் நிற்கப்போனது. 
 
இதை கண்ட இறைவி, தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு வேண்டினாள். இறைவன், இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவத்தலங்களை வழிபடுமாறு கூறினார். மேலும், எந்த தலத்தில் இடது கண் மற்றும் இடது தோள் துடிக்குமோ, அந்தத் தலத்தில் அவள் அடைக்கலம் பெறலாம் என அறிவித்தார்.

இலவச சிவபுராணம் கையேடு 


இறைவி பல தலங்களை தரிசித்தபின், பாடலீஸ்வரர் தலத்திற்கு  வந்த போது, இடது கண் மற்றும் இடது தோள் துடித்ததால், இங்கு தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை வழிபட்டு, அனுகிரகம் பெற்றாள். இதுவே, இறைவன் சித்தர் வடிவம் பூண்டுத், மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.
 
திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இதன் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். “போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்” என்ற வரிகளும், “அப்புலியூர் மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்” என்ற வரிகளும், இத்தலத்தின் ஆன்மிக மகிமையை வெளிப்படுத்துகின்றன.
 
திருநாவுக்கரசர் கரையேறிய காலத்திலும், நதி தென்பாலே ஓடியிருக்கலாம். இதனை ஆதரிக்கும் விதமாக, அவர் கரையேறிய இடத்திற்கருகிலுள்ள ஊர் “கரையேற விட்ட குப்பம்” என வழங்கப்படுகிறது. மேலும், அரசுப் பதிவுகளிலும் இந்த பெயர் காணப்படுகிறது. 

பன்னிரெண்டு வகைப் பூக்கள் பூக்கும் பாதிரி மரம், இந்தத் தலத்தின் தல விருட்சமாக விளங்குகிறது. இம்மரம் ஈசன் கோயிலின் மேற்குபுறத்தில் உள்ளது. தொன்மையான இம்மரம் பித்தளைத் தகடு போர்த்தி பாதுகாக்கப்பட்டு, சிவத்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. 
 
இந்தத் தலத்தில் ஒருமுறை சிவனை வழிபட்டால், காசியில் 16 முறை, திருவண்ணாமலையில் 8 முறை, சிதம்பரத்தில் 3 முறை வழிபட்ட பலனை பெறலாம் என நம்பப்படுகிறது.
 

கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 6.00–12.00  4.00–9.00
திங்கட்கிழமை 6.00–12.00  4.00–9.00
செவ்வாய்க்கிழமை 6.00–12.00  4.00–9.00
புதன்கிழமை 6.00–12.00  4.00–9.00
வியாழக்கிழமை 6.00–12.00  4.00–9.00
வெள்ளிக்கிழமை 6.00–12.00 4.00–9.00
சனிக்கிழமை 6.00–12.00  4.00–9.00

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

பிடாரி அம்மன் கோயில் தெரு, புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், கடலூர், தமிழ்நாடு - 607002.
 
Pidari Amman Koil Street, Puthunagar, Thirupathiripuliyur, Cuddalore, Tamil Nadu - 607002.

Temple Website

 

 

இலவச சிவபுராணம் கையேடு

 


Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.

Written by Sivanmanai Mission

If you have any suggestions or questions, please contact us at 900-305-9000. Click this link to join Thiruvasagam WhatsApp Group https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqrc

Leave a Reply

    Growth Is Just One Click Away

    Don't feel like calling? Just share some details about your SOP Requirements & Fhyzics representative will get in touch with you. Schedule A Meeting with our Manager [Consulting & Certifications]