சிவன்மனை அன்னதான தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Volunteers)
அன்பான தன்னார்வலர்களுக்கு வணக்கம். சிவன்மனையின் காலை நேர நித்ய அன்னதான சேவையில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உணவைப் பக்தர்களுக்குச் சீராகவும், தூய்மையாகவும் வழங்குவதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கனிவுடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்:
நேரம் & அன்னதான அளவு:
- அன்னதான நேரம்: காலை 8:45 மணி முதல் 9:45 மணி வரை.
- சாதாரண நாட்களில் 80 - 100 பக்தர்களும், சிறப்பு நித்திய அன்னதான நாட்களில் 100 - 150 பக்தர்களும் வருகை தருவர்.
- சேவைக்கு வரும் தன்னார்வலர்கள் காலை 8:45 மணிக்குள் உணவை சாப்பிட்டுவிட்டு சேவையைத் தொடங்கலாம்.
- முதலில் பரிமாறும்போது ஒன்றரை கரண்டி உணவு வழங்கவும். பக்தர்கள் கூடுதல் உணவு கேட்டால், பரிமாறிய உணவைச் சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அறிவுறுத்தவும்.
- அன்னதான நிகழ்விற்கு முந்தைய நாள், சிவன்மனை குழுவிலிருந்து உங்களுக்கு நினைவூட்டல் அழைப்பு (Reminder Call) வரும்.
சுத்தம் & சுகாதார முறைகள்:
- உணவு பரிமாறுவதற்கு முன் கட்டாயம் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
- கண்கள், மூக்கு, அல்லது தலைமுடியைத் தொட்ட பிறகு, மீண்டும் கைகளைக் கழுவாமல் உணவைத் தொடக்கூடாது.
- உணவைக் கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும்; கைகளால் தொடக் கூடாது. (மீதமாகும் உணவு மதியம் 12:00 மணி வரை வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பதால் கெட்டுப்போகாமல் இருக்க இது அவசியம்).
- உணவு பாத்திரங்களைத் தரையில் நேரடியாக வைக்கக் கூடாது. (தரையில் உள்ள முடி அல்லது தூசி, மூடியை மூடும்போது உணவில் விழ வாய்ப்புள்ளது).
உணவு கையாளும் முறை & பாதுகாப்பு:
- உணவு இரண்டாம் தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு (அன்னதான இடம்) அங்குள்ள நபர்களின் உதவியோடு கொண்டு வரப்படும். அங்கு ஆட்கள் இல்லாத பட்சத்தில், தன்னார்வலர்கள் இரண்டாம் தளத்திற்குச் சென்று உணவை எடுத்து வரலாம்.
- உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அங்குள்ள பிஸ்கட்டுகளை வழங்கலாம்.
- தரக்கட்டுப்பாடு சுகாதாரம் கருதி, வெளியில் தயார் செய்த உணவுகள் சிவனைமனைக்குள் பரிமாறப்படுவதில்லை.
- சிறுவர்கள் உணவை வீணாக்க வாய்ப்புள்ளதால், உணவு பரிமாறும் முறையைச் சரியாகக் கற்றுக்கொள்ளும் வரை சிறுவர்களை அனுமதிப்பதில்லை.
- பக்தர்கள் உணவை வீணாக்கினால், அதைத் தவிர்க்குமாறு எடுத்துரைக்கவும்.
பார்சல் வழிகாட்டுதல்:
- அன்னதானத்திற்குப் பிறகு உணவு மீதம் இருந்தால் மட்டுமே, காலை 11:00 மணிக்கு மேல் பார்சல் வழங்கப்படும்.
- அன்னதானம் நிறைவடையும் வரை பார்சல் உணவுகள் வழங்கப்பட மாட்டாது.
பொதுவான தகவல்கள்:
- பக்தர்கள் யாரேனும் பணம், புத்தகங்கள், மருத்துவ உதவி மற்றும் தேர்வுக்கட்டணம் போன்ற உதவிகளைக் கேட்டால், சிவன்மனை சார்பாக "அன்னதான சேவை மட்டுமே வழங்கப்படுகிறது" என்பதைப் தெளிவுபடுத்தவும்.
- ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து 9003059000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் மேலான சேவைக்கு மீண்டும் நன்றி!
அன்னதானம் வழங்குபவர் நாட்காட்டி





