திருச்சிற்றம்பலம்
கீதம் இனிய குயிலே கேட்டியேல்
எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம்
ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்இறந்து
நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம்
இலான்வரக் கூவாய். (8)

திருச்சிற்றம்பலம்
கீதம் இனிய குயிலே கேட்டியேல்
எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம்
ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்இறந்து
நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம்
இலான்வரக் கூவாய். (8)
திருச்சிற்றம்பலம்
திருமாலும் பன்றியாய்ச் சென்றுஉணராத் திருவடியை
உருநாம் அறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. (4)
திருச்சிற்றம்பலம்
செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்புஅறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். (6)
திருச்சிற்றம்பலம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
உன்விரையார் கழற்கு என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துஉன்னைப் போற்றி
சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே. (8)
திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வம் தன்னை
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு
கற்றிலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)
திருச்சிற்றம்பலம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (4)
திருச்சிற்றம்பலம்
கலந்து நின் அடியாரோடு அன்று
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. (8)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply