hero-img1

18-Thiruvasagam-Kuyirpattu

திருச்சிற்றம்பலம் 

கீதம் இனிய குயிலே கேட்டியேல் 
எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் 
ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்இறந்து
நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம் 
இலான்வரக் கூவாய். (8)

11-Thiruvasagam-Thiruththallanam

திருச்சிற்றம்பலம் 

திருமாலும் பன்றியாய்ச் சென்றுஉணராத் திருவடியை
உருநாம் அறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. (4)

08-Thiruvasagam-Thiru Ammanai

திருச்சிற்றம்பலம் 

செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்புஅறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். (6)

05(1)-Thiruvasagam-Meyunardhal

திருச்சிற்றம்பலம் 

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து 
உன்விரையார் கழற்கு என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துஉன்னைப் போற்றி 
சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே. (8)

35-Thiruvasagam-Achchappaththu

திருச்சிற்றம்பலம் 

புற்றில்வாள் அரவும் அஞ்சேன்  
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்  
கற்றைவார் சடைஎம் அண்ணல்  
கண்ணுதல் பாதம் நண்ணி  
மற்றும்ஓர் தெய்வம் தன்னை  
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு  
கற்றிலாதவரைக் கண்டால்  
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)

51-Thiruvasagam-Achcho Pathigam

திருச்சிற்றம்பலம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (4)

32-Thiruvasagam-Prarthanaipathu

திருச்சிற்றம்பலம்

கலந்து நின் அடியாரோடு அன்று 
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் 
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே 
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய் 
ஆர்வங் கூர அடியேற்கே. (8)

Leave a Reply