hero-img1

05(5)-Thiruvasagam-Kaimmaaru Koduthal

திருச்சிற்றம்பலம்

இருகை யானையை ஒத்திருந்து என்உளக்
கருவை யான்கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே. (4)

05(6)-Thiruvasagam-Anubhogasuthi

திருச்சிற்றம்பலம்

ஈசனே என் எம்மானே எந்தை
பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதும்ஒன்று அல்லாப்
பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க
மாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது
ஒன்றும் அறியேனே. (8)

05(4)-Thiruvasagam-Aaththuma Suththi

திருச்சிற்றம்பலம்

ஆடு கின்றிலை கூத்துஉடையான் கழற்கு

அன்பிலை என்புஉருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின்றதும்இலை
துணைஇலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோறு அலறிலை
செய்வதுஒன்று அறியேனே. (8)

44-Thiruvasagam-Ennapathigam

திருச்சிற்றம்பலம்

பார்உரு ஆய பிறப்புஅறவேண்டும் 
பத்திமையும் பெற வேண்டும்
சீர்உரு ஆய சிவபெருமானே 
செங்கமல மலர் போல்
ஆர்உரு ஆயஎன் ஆரமுதேஉன் 
அடியவர் தொகை நடுவே
ஓர்உரு ஆய நின்திருவருள் காட்டி 
என்னையும் உய்யக் கொண்டருளே. (8)

39-Thiruvasagam-Thiruppulambal

திருச்சிற்றம்பலம்

பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறாவெண்ணீறுஆடி
ஓங்குஎயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் புகழேனே. (4)

27-Thiruvasagam-Punarchippaththu

திருச்சிற்றம்பலம் 

சுடர் பொற்குன்றைத் தோளா முத்தை 
வாளா தொழும்பு உகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட 
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட்டு இன்னுஞ் சாரமாட்டாத் 
தன்னைத் தந்த என் ஆரமுதைப் 
புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ என் 
பொல்லா மணியைப் புணர்ந்தே. (8)

22-Thiruvasagam-Koyil Thiruppathigam

 திருச்சிற்றம்பலம் 

மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழிஅடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழு பரஞ்சோதி
உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. (8)

Leave a Reply