திருச்சிற்றம்பலம்
இருகை யானையை ஒத்திருந்து என்உளக்
கருவை யான்கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே. (4)

திருச்சிற்றம்பலம்
இருகை யானையை ஒத்திருந்து என்உளக்
கருவை யான்கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே. (4)
திருச்சிற்றம்பலம்
ஈசனே என் எம்மானே எந்தை
பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதும்ஒன்று அல்லாப்
பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க
மாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது
ஒன்றும் அறியேனே. (8)
திருச்சிற்றம்பலம்
ஆடு கின்றிலை கூத்துஉடையான் கழற்கு
அன்பிலை என்புஉருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின்றதும்இலை
துணைஇலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோறு அலறிலை
செய்வதுஒன்று அறியேனே. (8)
திருச்சிற்றம்பலம்
பார்உரு ஆய பிறப்புஅறவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்
சீர்உரு ஆய சிவபெருமானே
செங்கமல மலர் போல்
ஆர்உரு ஆயஎன் ஆரமுதேஉன்
அடியவர் தொகை நடுவே
ஓர்உரு ஆய நின்திருவருள் காட்டி
என்னையும் உய்யக் கொண்டருளே. (8)
திருச்சிற்றம்பலம்
பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறாவெண்ணீறுஆடி
ஓங்குஎயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் புகழேனே. (4)
திருச்சிற்றம்பலம்
சுடர் பொற்குன்றைத் தோளா முத்தை
வாளா தொழும்பு உகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட்டு இன்னுஞ் சாரமாட்டாத்
தன்னைத் தந்த என் ஆரமுதைப்
புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. (8)
திருச்சிற்றம்பலம்
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழிஅடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழு பரஞ்சோதி
உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. (8)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply