திருச்சிற்றம்பலம்
உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்புஎனப் பழுத்தஎன் குடிமுழுது ஆண்டு
வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீர்உடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே. (8)






Leave a Reply