hero-img1

36-Thiruvasagam-Thiruppandi Pathikam

திருச்சிற்றம்பலம்

பருவரை மங்கைதன் பங்கரைப்  
பாண்டியற்கு ஆரமுதாம் 
ஒருவரை ஒன்றும் இலாதவரைக்  
கழல் போது இறைஞ்சித் 
தெரிவர நின்று உருக்கிப்  
பரிமேற் கொண்ட சேவகனார் 
ஒருவரை அன்றி உருவுஅறியாது 
என்தன் உள்ளம்அதே. (8)

31-Thiruvasagam-Kandapathu

திருச்சிற்றம்பலம்

இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தம்இலா ஆனந்தம் அணிகொள் தில்லைகண்டேனே. (4)

25-Thiruvasagam-Aasaippaththu

திருச்சி

ற்றம்பலம்

கருடக்கொடியோன் காண மாட்டாக் 
கழற்சேவடி என்னும்
பொருளைத் தந்துஇங்கு என்னை ஆண்ட 
பொல்லா மணியே ஓ
இருளைத் துரந்திட்டு இங்கேவா என்று
அங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் 
கண்டாய் அம்மானே. (8)

திருவாசகக்குறள்

திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் அருளிய, பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகப் போற்றப்படும் அருட்பெருநூல். இறைவனின் திருவருளால் உள்ளம் உருகி, ஆன்மா சிவத்துடன் ஒன்றிடும் பேரனுபவத்தை எளிமையான, ஆழமான தமிழில் வெளிப்படுத்தும்

12-Thiruvasagam-Thiruchazhal

திருச்சிற்றம்பலம்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டுஎன்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. (4)

05(10)-Thiruvasagam-Aanandateedam

திருச்சிற்றம்பலம்

மாறு இலாத மாக்கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாள்இணை
வேறு இலாப் பதப்பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாதநீ எளியை ஆகிவந்து
ஒளிசெய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சுஉடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. (8)

10-Thiruvasagam-Tirukothumpi

திருச்சிற்றம்பலம் 

பூஏறு கோனும் புரந்தரனும் பொற்புஅமைந்த
நாஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாஏறு சோதியும் வானவருந் தாம்அறியாச்
சேஏறு சேவடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ. (4)

Leave a Reply