திருச்சிற்றம்பலம்
பருவரை மங்கைதன் பங்கரைப்
பாண்டியற்கு ஆரமுதாம்
ஒருவரை ஒன்றும் இலாதவரைக்
கழல் போது இறைஞ்சித்
தெரிவர நின்று உருக்கிப்
பரிமேற் கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி உருவுஅறியாது
என்தன் உள்ளம்அதே. (8)

திருச்சிற்றம்பலம்
பருவரை மங்கைதன் பங்கரைப்
பாண்டியற்கு ஆரமுதாம்
ஒருவரை ஒன்றும் இலாதவரைக்
கழல் போது இறைஞ்சித்
தெரிவர நின்று உருக்கிப்
பரிமேற் கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி உருவுஅறியாது
என்தன் உள்ளம்அதே. (8)
திருச்சிற்றம்பலம்
இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தம்இலா ஆனந்தம் அணிகொள் தில்லைகண்டேனே. (4)
திருச்சி
ற்றம்பலம்
கருடக்கொடியோன் காண மாட்டாக்
கழற்சேவடி என்னும்
பொருளைத் தந்துஇங்கு என்னை ஆண்ட
பொல்லா மணியே ஓ
இருளைத் துரந்திட்டு இங்கேவா என்று
அங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. (8)
திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் அருளிய, பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகப் போற்றப்படும் அருட்பெருநூல். இறைவனின் திருவருளால் உள்ளம் உருகி, ஆன்மா சிவத்துடன் ஒன்றிடும் பேரனுபவத்தை எளிமையான, ஆழமான தமிழில் வெளிப்படுத்தும்
திருச்சிற்றம்பலம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டுஎன்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. (4)
திருச்சிற்றம்பலம்
மாறு இலாத மாக்கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாள்இணை
வேறு இலாப் பதப்பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாதநீ எளியை ஆகிவந்து
ஒளிசெய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சுஉடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. (8)
திருச்சிற்றம்பலம்
பூஏறு கோனும் புரந்தரனும் பொற்புஅமைந்த
நாஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாஏறு சோதியும் வானவருந் தாம்அறியாச்
சேஏறு சேவடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ. (4)

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply