திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வம் தன்னை
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு
கற்றிலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)

திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வம் தன்னை
உண்டுஎன நினைந்து எம்பெம்மாற்கு
கற்றிலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே. (8)
திருச்சிற்றம்பலம்
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. (8)
திருச்சிற்றம்பலம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (4)
திருச்சிற்றம்பலம்
கலந்து நின் அடியாரோடு அன்று
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்துநின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. (8)
திருச்சிற்றம்பலம்
பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும்
புதுமலர்க் கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கு அறிஒண்ணாச்
செய்ய மேனியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (8)
திருச்சிற்றம்பலம்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. (3)
சிவன்மனை அன்னதான தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Volunteers)
அன்பான தன்னார்வலர்களுக்கு வணக்கம். சிவன்மனையின் காலை நேர நித்ய அன்னதான சேவையில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உணவைப் பக்தர்களுக்குச் சீராகவும்,

A blog dedicated to Siva temples across the globe maintained by www.Sivapuranam.in
Leave a Reply